தற்போது நாம் செய்யும் வேலை அமைப்பும், உட்காரும் நிலையும், குதிகால் கொண்ட செருப்புகளும் என மூட்டுக்களை பாழாக்கும் பல பழக்க வழக்கங்கள் நம்மிடம் உள்ளன.
மூட்டுவலி தோன்றுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மூட்டுகளில் தோன்றும் அழற்சியே ஆகும். மூட்டுகளில் உராய்வு ஏற்படாமல் தடுக்க இயற்கையிலேயே பசை போன்ற அமைப்பு படிந்து உள்ளது. ஆனால் மூட்டுகளில் உள்ள பசை போன்ற திரவம் குறையும்போது எலும்புகள் நேரடியாக உரச ஆரம்பிக்கின்றன.
இது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போது மூட்டு வலி துவங்குகிறது. பசை குறைந்து இரண்டு மூட்டுகளும் உராய்வது தொடரும் போது மூட்டுகள் தேய்ந்து விடவும் வாய்ப்புள்ளது.
இதனால் மூட்டு வாத நோய் ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகிறது. நடக்கும் போது ஏற்படும் மூட்டு வலிக்கு நடைப்பயிற்சிதான் சிறந்த மருந்து.
கீரை மற்றும் காய்கறிகளும் மூட்டுகளை பாதுகாக்கும். அதிகமான மாத்திரைகள் அல்லது முறையான ஆலோசனை இல்லாத மருந்துகளை தவிர்க்கவும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள், மூட்டுகளுக்கென பயிற்சி செய்யுங்கள்.
Tuesday, June 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment