Thursday, July 22, 2010

ஜமாலின் பிரிக்கப்படாத கடிதம்...!

ஜமால்...

தமிழகத்தின் ஒரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட ஒரு ஊரில் பிறந்த இளைஞன், குடும்ப சூழலால் 10ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல் தன் வீட்டை அடமானம் வைத்து சவுதிக்கு புறப்படுகிறான்

ஆனால் சவூதி வந்த பிறகுதான் தெரிகிறது கொஞ்சமாவாது படித்தால்தான் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கும் என்று, எனவே ஓரளவு செலவு செய்த தொகையை சம்பாதித்துக்கொண்டு தாயகம் திரும்பிவிடலாம் என தீர்மானிக்கிறான் 5 வருடங்கள் சவுதியிலேயே கழிகிறது

இப்பொழுது தன் பெற்றோருக்கு கடிதம் ஒன்று எழுதுகிறான் ஜமால்.அதில் தன் சவுதியை முடித்துக்கொண்டு ஊர் வருவதாக கூறியிருந்தான்,

அதற்கு அவன் வாப்பா எழுதும் பதில் கடிதத்தில்

“அன்புள்ள மகன் ஜமாலுக்கு இங்கு நான் உன் உம்மா தங்கை அனைவரும் நலம் அதுபோல் உன் நலம் மற்றும் உன் நன்பர்கள் நலம் அரிய ஆவல். நீ ஊர் வருவதாக எழுதி இருந்தாய் ரொம்ப சந்தோஷம் உன்னை காண நாங்கள் ஆவலாய் இருக்கிறோம் ஆனால் உன் உம்மா எதோ எழுத வேண்டுமாம்”

அதோடு ஜமாலின் உம்மா எழுதும் வார்த்தைகள் தொடர்கின்றது
“மகன் ஜமாலுக்கு நான் இங்கு நலம் உன் நலம் அறிய ஆவல், நீ சவுதியை முடித்துக்கொண்டு ஊர் வருவதாக எழுதியிருந்தாய்,ஒருபுறம் நம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சந்தோசம் என்றாலும், நாம் குடியிருக்கும் வீடு பழைய வீடு, இன்றோ நாளையோ இடிந்து விழும் அளவில் உள்ளது. அதை இடித்துவிட்டு சிறிதாக நாம் தாங்கும் அளவில் ஒரு வீடு கட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இந்த குடும்ப சுமைகளை சுமந்து கொண்டிருப்பவன் நீதான் ஆகவே இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்து நம் வீட்டையும் கட்டிவிட்டால் பின்பு நீ இங்கு வந்துவிடலாம். உன் சாதகமான பதிலை எதிர்பார்க்கும்
உன் உம்மா.”

கடிதத்தை படித்த ஜமால் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் பயணத்தை ரத்து செய்கிறான்.
வருடங்கள் கழிகின்றன அவன் தாய் நினைத்தபடி ஒருவழியாய் கஷ்டப்பட்டு வீடும் கட்டி முடித்தாகிவிட்டது, இப்பொழுது எப்படியும் நாடு திரும்பிவிடவேண்டும் என தீர்மானித்து தன் வீட்டிற்கு தெரியப்படுத்துகிறான்.

மீண்டும் பதில் வருகிறது ஜமாலின் பெற்றோரிடமிருந்து,

“அன்புள்ள ஜமாலுக்கு................ நீ ஊர் வருவதால் நாம் எல்லோரும் சந்தோசம் அடைவோம். ஆனால் நமக்கு மற்றுமொரு கடமை பாக்கி இருக்கிறது அது உன் தங்கை , அவள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள், அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பது நம் கடமை ஆகவே அந்த பொறுப்பு உன்னிடம்தான் உள்ளது எனவே அதை சிந்தித்து ஊர் வரும் முடிவை தள்ளிப்போடுவது நல்லது”.

மீண்டும் ஜமாலின் பயணம் ரத்து, தன் தங்கைக்காக பொருள் பணம் சேர்க்கிறான் ஜமால், அவன் தங்கைக்கு நல்ல இடம் அமைவதாகவும் உடன் விடுமுறையில் ஊர் வரவேண்டும் என அவனுக்கு கடிதம் வருகிறது உடன் தன் நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு புறப்படுகிறான் ஜமால் மேலும் ஊரிலும் கடன் வாங்கி அவன் தங்கையின் திருமணமும் ஜமாலின்
திருமணமும் ஒரே நாள் நடக்கிறது. விடுமுறை முடிந்து சவூதி திரும்புகிறான் ஜமால்.

திருமண கடன் எல்லாம் முடிகிறது இதற்கிடையில் ஜமாலுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இப்பொழுது ஊர் ஞாபகம் அவனை வாட்டுகிறது இப்பொழுதாவது ஊரில் செட்டில் ஆகவேண்டும் என தீர்மானிக்கிறான், இப்பொழுதும் ஒரு கடிதம் வருகிறது அனால் அக்கடிதம் அவன் பெற்றோரிடமிருந்தல்ல, அக்கடிதம் வந்தது அவன் மனைவியிடமிருந்து.

“அன்புள்ள கணவருக்கு..................... நீங்கள் ஊர் வரும் செய்தி அறிந்தேன் இத்தனை நாள் சம்பாதித்து உங்களுக்கென்று ஒன்றும் சேர்க்கவில்லை இப்பொழுது நமக்கு ஒரு குழந்தையும் ஆகிவிட்டது இப்பொழுது ஊர் வந்து நம் குடும்பத்திற்கு வழி என்ன இருக்கிறது நம் குழந்தையின் எதிர் காலத்தை மனதில் கொண்டு நீங்கள் அங்கேயே தொடர்வது நல்லது”.

ஜமாலின் சவூதி வாழ்க்கை மீண்டும் தொடர்கிறது இதற்கிடையில் ஒவ்வொரு முறையும், விடுமுறை நாட்கள் (vacation) குறைந்த நாட்களே அவன் வேலை செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அவன் வயதும் இளமையும் சவுதியிலேயே கழிகிறது.
ஜமாலின் மகனும் வளர்கிறான், வருடங்கள் கடந்து போகின்றன.
+2 முடித்து மேற்படிப்புக்கு தயாராகிறான் ஜமாலின் மகன்.

இப்பொழுது ஜமாலின் மகனிடமிருந்து ஒரு கடிதம், அதில் , “அன்புள்ள வாப்பாவுக்கு................... நான் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து இருக்கிறேன் எனவே எனக்கு என்ஜினியரிங் படிக்க விருப்பமாய் உள்ளது உங்கள் சம்மதத்தை எதிர்பார்கிறேன்”.

கடிதத்தை படித்த ஜமால் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற விழைகிறான்

உழைக்கிறான் தன் குடும்பத்திற்காக, மகனின் என்ஜினியரிங் படிப்பும் முடிகிறது ஜமாலின் மகனுக்கு இந்தியாவிலேயே வேலையும் கிடைக்கிறது.
இப்பொழுது தீர்மானமாய் முடிவெடுத்துவிட்டான் ஜமால் சவுதிக்கு விடை கொடுப்பது என்று.
தன் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் தன் நண்பர்களின் பிரிவுபச்சரத்தோடு விமானத்தில் ஜமால்.

ஒவ்வொரு முறை விடுமுறையில் ஊருக்கு செல்லும்போதும் அவன் பெட்டியில் வீட்டுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான் நிறைய சாமான்கள், அனால் இப்பொழுது அவன் பெட்டியில் நிறைய மருந்து மாத்திரைகள். ஆம், இத்தனை ஆண்டு வெளிநாட்டு வாழ்கையில் அவனுக்கென்று அவன் சம்பாதித்தது சர்க்கரை நோயும், இரத்தக்கொதிப்பு நோயும், கிட்னியில் கல்லும்தான் உடல் சோர்ந்து முடிகள் நரைத்து தாயகம் திரும்புகிறான் ஜமால்

இப்பொழுதும் அவன் சட்டைப்பையில் அவன் வீட்டிலிருந்து வந்த ஒரு கடிதம்.

ஆனால் அதை அவன் பிரித்து படிக்கவேயில்லை.
Continue Reading...

Sunday, July 18, 2010

பழுதான நிலையில் தொழும் பள்ளி



அதிரை ஆஸ்பத்திரிதெரு புதுப்பள்ளிவாசல் இடிக்கப்பட்டு புதிதாய் கட்டும் பனி, கடந்த ரமலான் முடிந்து துவங்கப்பட்டு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே, இப்பள்ளி கட்டி முடிக்கப்படும் வரையில் தொழ ஏதுவாக தனியாக கொட்டகை பள்ளி ஒன்று சிறிதாய் கட்டப்பட்டது அது இப்பொழுது பழுதடைந்த நிலையில் முழுதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது, ஏற்கனவே புதிய பள்ளி கட்டுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த இப்பள்ளிவாசல் நிர்வாகம் இப்பொழுது மற்றுமொரு பிரச்சனையை சந்தித்துள்ளது.
Continue Reading...

வகை வகையான இட்லி





Continue Reading...

Saturday, July 17, 2010

உங்கள் உடல் எடை சரியாக இருகிறதா...?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்

உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3

இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் இலகுவானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm
Continue Reading...

Wednesday, July 14, 2010

சளி பிடிக்காமல் இருக்க


சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது.
அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல்
தடுக்க உதவியாய் இருக்கிறது.

நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்
மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று
முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்
Continue Reading...

Tuesday, June 29, 2010

சாதிக்கப்போவது யாரு...?

தங்களால் மட்டுமே சாதிக்க முடியும், எங்கள் பள்ளிகளில்தான் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கமுடியும் என்று பெருமை அடித்துக்கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் என்றும் சளைத்தவர்கள அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெளிவந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்தார். இதனால் மற்ற அரசுப்பளிகளும் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகலும் தங்கள் காலரை தூக்கி விட்டுகொண்டுள்ளன.
இதை பறை சாற்றும் வகையில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளும் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு தந்த சரியான பயிற்றுவிக்கும் முறையால், நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியை காண முடிந்தது, இதில் மாணவிகள், மாணவர்களைவிட திறமைசாலிகள் என்பதை மீண்டும் நிரூபித்தனர்.
கையில் கொஞ்சம் வசதி இருந்தால் மட்டுமே பயில முடியும் என்ற சூழலில் உள்ள இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிலை என்ன? ஆங்கிலத்தில் தம் பிள்ளைகள் பேசலாம், பயிற்றுவிப்பு முறையில் உயர்தரம் இருக்கும் மேலும் மேற்படிப்புக்கு இலகுவாக இருக்கும் என்பதால் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இது போன்ற தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் எதில் தவறு நடக்கிறது என்று தெரியாமலேயே இதன் தேர்ச்சி விகிதம் சமீபத்தில் குறைந்து வருவது ஏன்?
பிள்ளைகள் பயில்வதற்கு , பெற்றோருக்கு நேர்முக தேர்வு, மற்றும் பலவிதமான வகையில் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி பள்ளியில் சேர்கின்றன சில தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் தானாகவே பள்ளியை விட்டு வெளியேறும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் பள்ளியிலிருந்து வெளியாக்கப்படுகின்றனர் .
இதற்க்கு உதாரணம் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாற்றுதிறன் கொண்ட மாணவனுக்கு சரியாக கல்வியில் நாட்டமில்லாமல் மிக குறைந்த மதிப்பெண்ணே எடுக்கும் காரணத்தால் அந்த மாணவனோடு யாரையும் அண்டவிடாமல் அவனுக்கு பைத்தியம் என்று கூறி வகுப்பிலும் தனிமை படுத்தப்பட்ட சூழலில் அந்த மாணவன் தானாகவே பள்ளியைவிட்டு விலகும் அளவுக்கு மன ரீதியாக நெருக்கடி கொடுத்திருக்கிறது. இதனால் மனம் நொந்த அந்த மாணவனின் பெற்றோர் அரசு பள்ளியை நாடியிருக்கின்றனர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அரசுப்பளியில் சேர்த்திருக்கின்றனர் இப்போது நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 60சதவீத மதிப்பெண் பெற்று தேரியிருக்கிறான் அந்த மாணவன். அப்படியானால் 5 மதிப்பெண்கூட எடுக்கமாட்டன் என்று தனியார் பள்ளி ஒதுக்கிய அந்த மாணவனுக்கு 60 சதவீத மதிப்பெண் எப்படி கிடைத்தது?. அப்படியானால் சராசரி மாணவர்களுக்குகூட பயிற்றுவிக்கும் வகையில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திறமை இல்லையா?.
தான்தான் சரியாக படிக்கவில்லை தன் பிள்ளைகளாவது நன்றாக படிக்கவேண்டும் என்ற ஆசையில் தனக்கு தகுதி, வசதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு எப்பாடு பாட்டாவது கல்விக்காக செலவு செய்ய தயாராக இருக்கின்றனர் நடுத்தர பெற்றோர்கள்.
இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகிகள், நமதூரின் எதிர்காலத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் நிறையவே சிந்திப்பவர்கள் வெளியில் தெரியாத சேவைகளை செய்து வருபவர்கள், இதை மனதில் கொண்டுதான் பேராசிரியர் பரகத் அவர்களை முதல்வராக தேர்ந்தேடுத்திருக்கின்றனர் இதற்க்காக இந்நிர்வாகம் நன்றிக்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.
பேரா. பரகத் அவர்கள், அக்காலம் முதலே மாணவர்களின்மீது நல்ல அக்கறையும் ஆக்கப்பூர்வமான் அறிவுரைகளும் வழங்கி வருபவர் மேலும் மிகச்சிறந்த பொது நல சேவகரும் கூட, இவர் இப்பள்ளிக்கு, எல்லோரும் மெச்சும் அளவுக்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றே நம்புகிறோம். இது இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின், பெற்றோர்களின் ஆசை.


இவ்வருடம் சாதிக்கப்போவது யார் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியா?, காதிர் முகைதீன் மேல்நிலை பள்ளியா?.
எல்லா பள்ளிகலுமே சாதிக்கவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் ஆசையும்.
வல்ல அல்லாஹ் நம் எல்லா மாணவர்களுக்கும் இவ்வுலக மறுவுலக கல்வியிலும் வாழ்விலும் வெற்றியை தருவானாக ஆமீன்.
Continue Reading...

Tuesday, June 1, 2010

மூ‌ட்டு வ‌லியை முட‌க்‌கி ‌விடு‌ங்க‌ள்

த‌ற்போது நா‌ம் செ‌ய்யு‌ம் வேலை அமை‌ப்பு‌ம், உ‌ட்காரு‌ம் ‌நிலையு‌ம், கு‌திகா‌ல் கொ‌ண்ட செரு‌ப்புகளு‌ம் என மூ‌‌ட்டு‌க்களை பாழ‌ா‌க்கு‌ம் பல பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் ந‌ம்‌மிட‌‌ம் உ‌ள்ளன.

மூட்டுவலி தோன்றுவதற்கு முக்கிய காரணம் எ‌ன்னவெ‌ன்றா‌ல் மூட்டுகளில் தோன்றும் அழற்சியே ஆகு‌ம். மூட்டுகளில் உரா‌ய்‌வு ஏ‌ற்படாம‌ல் தடு‌க்க இய‌ற்கை‌யிலேயே பசை போ‌ன்ற அமை‌ப்பு படி‌ந்து உ‌ள்ளது. ஆனா‌ல் மூ‌ட்டுக‌ளி‌ல் உள்ள பசை போன்ற திரவம் குறையும்போது எலும்புகள் நேரடியாக உரச ஆரம்பி‌க்‌கி‌ன்றன.

இது ஆர‌ம்ப‌க் க‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போது மூ‌ட்டு வ‌லி துவ‌ங்கு‌கிறது. பசை குறை‌ந்து இர‌ண்டு ‌மூ‌ட்டுகளு‌ம் உரா‌ய்வது தொடரு‌ம் போது மூட்டுகள் தேய்ந்து விடவும் வாய்ப்புள்ளது.

இதனால் மூட்டு வாத நோய் ஏ‌ற்ப‌ட்டு கடுமையான வலி உ‌ண்டா‌கிறது. நட‌க்கு‌ம் போது ஏ‌ற்படு‌ம் மூ‌ட்டு வ‌லி‌க்கு நடைப்பயிற்சிதா‌ன் சிறந்த மருந்து.

கீரை மற்றும் காய்கறிகளும் மூட்டுகளை பாதுகாக்கும். அதிகமான மாத்திரைகள் அல்லது முறையான ஆலோசனை இல்லாத மருந்துகளை தவிர்க்கவும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள், மூட்டுகளுக்கென பயிற்சி செய்யுங்கள்.
Continue Reading...
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template