Wednesday, July 28, 2010

குழந்தையைக் கொன்று ரத்தத்தைக் குடித்து..


யாரோ மூடர்கள் சொன்னதை நம்பி, பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையைக் கடத்தி... நரபலி கொடுத்து, ரத்தத்தைக் குடித்து... தலை வேறு உடல் வேறாகத் துண்டித்து, தூக்குவாளியில் கொண்டு சென்று வெவ்வேறு ஊர்களில் புதைத்து... அப்பப்பா அந்தக் கொடூரன் செய்த பயங்கரத்தை விவரிக்கும்போதே குலை நடுங்குகிறது!

மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சிரின் பாத்திமா. அவர் கணவர் திடீரென இறந்து போனதால் நிம்மதி வேண்டி, ஒண்ணரை வயதேயான மகன் காதர் யூசுப்புடன் மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கி இருந்தார். நரபலி கொடுக்க தலைப்பிள்ளை தேடி ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருந்த மந்திரவாதி அப்துல் கபூர், கடந்த 20 நாட்களுக்கு முன் இதே தர்காவுக்கு வந்தான். அங்கிருந்த பிஞ்சைக் கொன்றுதான் இந்த பஞ்சமா பாதகத்தைச் செய்திருக்கிறான் அந்தக் கொடூரன்!
தனக்கென ஆதரவாக இருந்த ஒரு குழந்தையையும் இப்படி அநியாயமாக அள்ளிக் கொடுத்த துக்கத்தில் துவண்டு கிடந்தார் சிரின் பாத்திமா. அவரை ஆறுதல் படுத்திப் பேச வைத்தோம்.

'என் வீட்டுக்காரர் கவுகர் பாட்ஷா கொத்தனார் வேலை செய்தார். நாலு மாசத்துக்கு
முந்தி ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டார். அந்த துக்கத்தை மறக்கமுடியாம மன நிம்மதிக்காக கோரிப்பாளையம் தர்காவில் தங்கியிருந்தேன். 2-ம் தேதி காலை 4 மணிக்கு எழுந்தப்ப பக்கத்துல படுத்திருந்த குழந்தைக்கு குளிருமேனு போர்வையால் போர்த்திட்டு மறுபடியும் படுத்தேன். ஒரு மணி நேரம் கழிச்சு, பாங்கு சொன்னாங்க. அப்ப எந்திரிச்சுப் பார்த்தா குழந்தையைக் காணோம். பதறிப்போயி தேடுனேன்...' என்று சொல்லிவிட்டுக் கதறியவர், 'நான் அங்கு தங்கி இருந்தப்பதான் அப்துல் கபூர் என் குழந்தையை எடுத்துக் கொஞ்சினான். குடும்பத்தைப் பத்தி அக்கறையா விசாரிச்சான். அந்தப் பாவி இப்படிப் பண்ணுவான்னு நினைச்சுக்கூட பார்க்கலையே...' என்றார்.

கோரிப்பாளையம் தர்கா டிரஸ்ட்டி பாஷல் பாட்ஷா, 'இந்த தர்காவுக்கு யார் வந்தாலும் அவர்களின் முழு முகவரியையும் பெற்றுக்கொண்டுதான் தங்குவதற்கு அனுமதி கொடுப்போம். கடந்த 30-ம் தேதி அப்துல் கபூர் ஒரு பெண்ணுடன் இங்கு வந்தான். தன் மனைவிக்கு கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஆகிவிடுவதாகவும், இங்கு 41 நாள் தங்குவதற்கு தனக்கு உத்தரவு வந்திருப்பதாகவும் சொல்லி அனுமதி கேட்டான். நாங்களும் அனுமதி கொடுத்தோம். ஆனால், குழந்தை காணாமல்போன அன்றே அவங்க இரண்டு பேரையும் காணவில்லை...'' என்றார்.
குழந்தையின் சித்தப்பா சாதிக் பாட்ஷாவை சந்தித்தோம். 'அப்துல் கபூர் மீது ஆரம்பத்துலேயே சந்தேகம் இருந்துச்சு. அவன் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்ததால, அவன் கொடுத்த அட்ரஸ்படி காயல்பட்டினத்துக்குப் போனோம். அங்கிருந்தவங்க எங்களோட பேசுறதுக்கே தயங்குனாங்க. அந்த ஊர் இமாம் சொன்னதும்தான்... அப்துல் கபூரைப் பற்றி அந்த ஊர்ப் பெண்கள் கதை கதையா சொல்ல ஆரம்பிச்சாங்க. 'அவன் ஒரு அயோக்கியன். சொந்த வீட்லேயே திருடியவன். எங்க வீட்லயும் கைவரிசை காட்டி இருக்கான். தன் சொந்தப் பிள்ளையையே பணத்துக்காக வித்தவன். தன் நகை, பணத்தை எல்லாம் கொடுத்து அந்தப் பிள்ளையை மீட்ட அவனோட முதல் மனைவி விவாகரத்து வாங்கிட்டுப் போய்ட்டா. பெண்கள் விஷயத்திலும் ரொம்ப மோசமான ஆளு. வருடத்துல ஒரு மாதம்கூட வீடு தங்க மாட்டான். அவன் ஊருக்குள்ள வந்தாலே நாங்க கதவைப் பூட்டிக்கிருவோம். கிட்டத்தட்ட அவன் ஒரு சைக்கோதான்'னு அவங்க சொன்ன விவரங்களை மதுரைக்கு வந்து போலீஸ்கிட்ட சொன்னேன். போலீஸைக் கூட்டிட்டு கன்னியாகுமரி, முத்துப்பேட்டை, நாகூர், திருச்சி, சேலம்னு 15 ஊர்களில் உள்ள தர்காக்களில் அவனைத் தேடினோம். கிடைக்கலை. கடைசியில், நாங்க போகாத காயல்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி தர்காவுலதான் போலீஸ் அவனை பிடிச்சிருக்கு!'' என்றார்.

மதுரை தல்லாகுளம் போலீஸாரிடம் கேட்டபோது, '22-ம் தேதி காயல்பட்டினத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர், சாதிக் பாட்சாவுக்கு போன் போட்டு, 'அப்துல் கபூர் ஊருக்கு வந்திருக்கிறான். உடனே வந்தா குழந்தையை மீட்டுடலாம்'னு சொன்னாங்க. உடனே அங்கே போனோம். அப்போ இரவு 8 மணி. 'அடடா...

கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக் கூடாதா? அவன் போய்ட்டானே'னு சொன்னாங்க. எங்கே போனான்னு விசாரிச்சப்ப, கல்லாமொழி தர்காவுக்கு போயிருக்கிறதா தெரிஞ்சுது. நாங்க ராத்திரி 11 மணிக்கு அங்க போயி சத்தம் போடாமல் மெதுவா ஆளைத் தேடினோம். தர்காவுக்கு பின்னால் இருந்த கடற்கரை பாதையில் அவன் ஒரு பெண்ணுடன் படுத்திருந்தான். அவனைப் பிடித்து, 'மரியாதையா குழந் தையைக் கொடுத்துரு'ன்னு மிரட்டினோம். கல்லு மாதிரி நின்னான். கடைசியில் குழந்தையை நரபலி கொடுத்துட்டதா சொல்லி திகில் கிளப்பிட்டான். குழந்தையின் தலையைப் புதைத்த இடத்துக்கு பக்கத்துலதான் அவங்க ரெண்டு பேரும் பயமில்லாம படுத்துருந்தாங்க...' என்றார்கள்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸாரோ, 'கைக் குழந்தையோட வந்த அப்துல் கபூர், ஏரலில் ஒரு லாட்ஜில் மூணு நாள் தங்குறதுக்கு ரூம் எடுத்திருக்கான். அங்க வெச்சுத்தான் குழந்தையை நரபலி கொடுத்திருக்கான். கழுத்தை அறுத்து ரத்தத்தை கணவனும் மனைவியும் குடிச் சிருக்காங்க. அப்புறம் தலையைத் துண்டிச்சு, அதை ஒரு தூக்குவாளியிலும், உடலை மற்றொரு தூக்குவாளியிலும் எடுத்துட்டு கல்லாமொழி தர்கா அருகே உள்ள ஆளில்லாத குடிசையில் ஏதோ பூஜை நடத்தியிருக்கான். பின்பு தர்கா, கடல், சூரியன் மூணும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சு, அந்த இடத்துல பூஜை செய்திருக்கான். பூஜை முடிஞ்சதும் மற்றொரு தூக்குவாளியில் உடலை கொண்டுபோய் ஏர்வாடியில் வெச்சு பூஜை செஞ்சுட்டு அங்கயே புதைச்சிருக்கான்...' என்கிறார்கள்.

குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட வீடு, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே காட்டுப்பள்ளி பகுதியில் உள்ளது. அந்த வீட்டை கடந்த மாதம் 20-ம் தேதி வாக்கில் அப்துல் கபூர் வாடகைக்குக் கேட்டிருக்கிறான். தர முடியாது என்று சொல்லியும், ஒரே ஒரு மாதம்தான் என்று கெஞ்சி வாடகைக்கு எடுத்திருக்கிறான். தளம் இல்லாத வீடு என்பதால் உள்ளேயே தோண்டி குழந்தையை புதைக்க ஏதுவாக அமைந்துவிட்டது.

அப்துல் கபூர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 'ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்தபோது, கணவனை இழந்த ரமலாபீவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தோம். அவளுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை. நான் எவ்வளவோ மாந்திரீகம் செய்தும் குழந்தையும் தங்கவில்லை. தலைக் குழந்தையை கொன்று நரபலி கொடுத்து அதன் உதிரத்தைக் குடித்து இப்படி எல்லாம் செய்தால், எனக்கும் மந்திர சக்தி அதிகரிக்கும். மனைவிக்கும் மனநிலை சரியாகி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொன்னார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன்!' என்று அசராமல் சொல்லி இருக்கிறான்.

நன்றி,
ஜூனியர் விகடன்
Continue Reading...

Sunday, July 25, 2010

காலணி கலவரம் வழக்கில் அப்பாவிகளை விடுவிக்க வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)


முன்பு அந்த நாற்பது பேரில் நீங்களும் ஒருவரா? என்ற கட்டுரை "அதிரை எக்ஸ்பிரசில் வந்ததை சகோதர் மு.அ.ஹாலிது மூலம் அறிந்தேன்., இந்த வழக்கில் என்னைத்தான் முதல் குற்றவளியாக பொய்வழக்கில் சேர்த்தனர்., அதில் குற்றவளியாக புனையப்பட்ட அனைத்து அப்பாவி சகோதர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க பலசிரமங்களுக்கு இடையில் பாடுபட்டேன் இதற்க்கு இறுதியாக செக்கடிமேட்டிலுள்ள தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பகத்தை சேர்ந்த நண்பர்கள் குழுதான் முழு உதவி செய்தனர்., அல்ஹம்துலில்லாஹ்

அந்த உதவியின் மூலம் என்னுடன் வழக்கிற்கு ஒத்துழைத்த பதிமூன்று நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீதமுள்ளவர்களுக்கும் தகவல் கொடுத்தும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. பரவாயில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அவர்களுக்கு வாய்ப்புகள் அருகில் உள்ளது.


இனி அவர்கள் மேற்குறிப்பிட்ட வழக்கிலிருந்து விடுதலை பெற விரும்பினால்., இன்ஷா அல்லாஹ் நான் முழுபொறுப்பையும் ஏற்று வழக்கை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கின்றேன்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் என்னுடைய வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்களே உடனடியாக 9443295916 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு வழக்கிற்கு ஒத்துழைத்தால் போதும் அவரிடம் இதைப் பற்றி (வழக்கறிஞர் அவர்களுக்கு) தகவல் விரிவாக கொடுக்கப்பட்டு விட்டது.


தங்களின் அன்புள்ள
சி. நா. அ. சரபுதீன்
சிட்னி
--
Continue Reading...

Saturday, July 24, 2010

வேண்டாமே இந்த குறுக்கு வழி .

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

போலி மதிப்பெண் சான்றிதழ்களை அரசு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல் நல்ல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பல மாணவர்களின் பெற்றோர், போலி சான்றிதழ்கள் என தெரிந்தே வாங்கியுள்ளனர். பெற்றோரின் குறுக்குவழியால், விஷயம் தெரியாமலே சில மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் கவுன்சிலிங்கைப் போல, மருத்துவக் கவுன்சிலிங்கிலும் 10 மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பிடிபட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், பிளஸ் 2வில் 80 சதவீத மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். ஆனால், மருத்துவப் படிப்பில் சேர ஆசைப்பட்டும், பொறியியலில் முன்னணி கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேரவும் இந்த குறுக்கு வழியை முயற்சித்துள்ளனர். இதனால், மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவம், பொறியியல் என எந்தவொரு உயர் கல்வி பெறுவதற்கும் பிளஸ் 2 மதிப்பெண்ணே முக்கியம். பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களின் மதிப்பெண் மிக முக்கியத்துவம் பெறுகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த பாடங்களில் அதிக மதிப்பெண்ணைப் பெறாத மாணவர்கள், விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கின்றனர். தமிழகத்தின் அரசு தேர்வுத் துறையில் விடைத்தாள் மறு மதிப்பீடு மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படுவதால் அதில் மதிப்பெண் மாற்றம் பெறுவது என்பது சிரமம்.அதனால் மாணவர்கள் சிலர் முக்கியப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக குறுக்கு வழியைப் பின்பற்றுகின்றனர். அவர்களால் இரவு, பகல் பாராமல் உண்மையிலேயே கடினப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், ஆசிரியர்கள் கூறுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதாலும், அதில் ஏராளமான பேர் வேலை செய்வதாலும் போலிச் சான்றிதழ்கள் குறிப்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் பற்றி ஓரளவுக்குக் கண்டுபிடிக்க முடிகிறது. மற்றவற்றில் அப்படி இருக்குமா என்று சொல்வதற்கில்லை' சட்டப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தொழில்நுட்பத் திறமையோ, தேவையான ஆள்களோ இல்லை என்றும் இவற்றில் பெரும்பாலும் மாணவர்கள் அளிக்கும் மதிப்பெண் சான்றிதழைத்தான் பெரிதாக நம்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.தங்கள் பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்தால் போதும் என்று எதையும் அடகு வைக்கவும், கடன் பெறவும் தயாராகும் கணிசமான பெற்றோர்களுக்கு, பணம் கொடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் பெறுவது பெரிய தவறாகத் தெரிவதில்லை.இது போன்ற செயல்களால் மாணவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் சமுதாயத்துக்கும், லட்சக்கணக்கான மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, விடைத்தாள்களைத் திருத்தி, தேர்வு முடிவுகளை வெளியிடும் அரசு தேர்வுத் துறைக்கும், அதற்கு செலவழிக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் மிகப் பெரிய இழுக்கு ஏற்படும். போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களால் நாட்டுக்கு எப்படி நல்லது நடக்கும்.அடையாளம் காண்பது கடினம்: அரசு அதிகாரி ஒருவர் கூறியது:பி.இ., மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போலி மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுக்கு இடையே வேறுபாடு பெரிதாக இல்லை. காகிதத்தின் கனம், அதில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகளின் அளவு, அதிகாரியின் கையெழுத்து என எல்லாமே ஒன்றாகவே இருக்கின்றன. அப்படியிருக்கும்போது அதில் அசல் எது? போலி எது? என்பதை சாதாரணமானவர்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்' என்றார்.எனவே, மாணவர் நலனைக் காக்கவும், நாட்டின் நலனைக் காக்கவும் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்; காவல் துறையும் தனது பங்கை அளிக்க வேண்டும். பெற்றோரும், மாணவர்களும் இது போன்ற குறுக்கு வழியை கையாலாமல் நேர்மையான வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

அதிரை - சர்புதீன்
Continue Reading...

Thursday, July 22, 2010

ஜமாலின் பிரிக்கப்படாத கடிதம்...!

ஜமால்...

தமிழகத்தின் ஒரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட ஒரு ஊரில் பிறந்த இளைஞன், குடும்ப சூழலால் 10ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல் தன் வீட்டை அடமானம் வைத்து சவுதிக்கு புறப்படுகிறான்

ஆனால் சவூதி வந்த பிறகுதான் தெரிகிறது கொஞ்சமாவாது படித்தால்தான் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கும் என்று, எனவே ஓரளவு செலவு செய்த தொகையை சம்பாதித்துக்கொண்டு தாயகம் திரும்பிவிடலாம் என தீர்மானிக்கிறான் 5 வருடங்கள் சவுதியிலேயே கழிகிறது

இப்பொழுது தன் பெற்றோருக்கு கடிதம் ஒன்று எழுதுகிறான் ஜமால்.அதில் தன் சவுதியை முடித்துக்கொண்டு ஊர் வருவதாக கூறியிருந்தான்,

அதற்கு அவன் வாப்பா எழுதும் பதில் கடிதத்தில்

“அன்புள்ள மகன் ஜமாலுக்கு இங்கு நான் உன் உம்மா தங்கை அனைவரும் நலம் அதுபோல் உன் நலம் மற்றும் உன் நன்பர்கள் நலம் அரிய ஆவல். நீ ஊர் வருவதாக எழுதி இருந்தாய் ரொம்ப சந்தோஷம் உன்னை காண நாங்கள் ஆவலாய் இருக்கிறோம் ஆனால் உன் உம்மா எதோ எழுத வேண்டுமாம்”

அதோடு ஜமாலின் உம்மா எழுதும் வார்த்தைகள் தொடர்கின்றது
“மகன் ஜமாலுக்கு நான் இங்கு நலம் உன் நலம் அறிய ஆவல், நீ சவுதியை முடித்துக்கொண்டு ஊர் வருவதாக எழுதியிருந்தாய்,ஒருபுறம் நம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சந்தோசம் என்றாலும், நாம் குடியிருக்கும் வீடு பழைய வீடு, இன்றோ நாளையோ இடிந்து விழும் அளவில் உள்ளது. அதை இடித்துவிட்டு சிறிதாக நாம் தாங்கும் அளவில் ஒரு வீடு கட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இந்த குடும்ப சுமைகளை சுமந்து கொண்டிருப்பவன் நீதான் ஆகவே இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்து நம் வீட்டையும் கட்டிவிட்டால் பின்பு நீ இங்கு வந்துவிடலாம். உன் சாதகமான பதிலை எதிர்பார்க்கும்
உன் உம்மா.”

கடிதத்தை படித்த ஜமால் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் பயணத்தை ரத்து செய்கிறான்.
வருடங்கள் கழிகின்றன அவன் தாய் நினைத்தபடி ஒருவழியாய் கஷ்டப்பட்டு வீடும் கட்டி முடித்தாகிவிட்டது, இப்பொழுது எப்படியும் நாடு திரும்பிவிடவேண்டும் என தீர்மானித்து தன் வீட்டிற்கு தெரியப்படுத்துகிறான்.

மீண்டும் பதில் வருகிறது ஜமாலின் பெற்றோரிடமிருந்து,

“அன்புள்ள ஜமாலுக்கு................ நீ ஊர் வருவதால் நாம் எல்லோரும் சந்தோசம் அடைவோம். ஆனால் நமக்கு மற்றுமொரு கடமை பாக்கி இருக்கிறது அது உன் தங்கை , அவள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள், அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பது நம் கடமை ஆகவே அந்த பொறுப்பு உன்னிடம்தான் உள்ளது எனவே அதை சிந்தித்து ஊர் வரும் முடிவை தள்ளிப்போடுவது நல்லது”.

மீண்டும் ஜமாலின் பயணம் ரத்து, தன் தங்கைக்காக பொருள் பணம் சேர்க்கிறான் ஜமால், அவன் தங்கைக்கு நல்ல இடம் அமைவதாகவும் உடன் விடுமுறையில் ஊர் வரவேண்டும் என அவனுக்கு கடிதம் வருகிறது உடன் தன் நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு புறப்படுகிறான் ஜமால் மேலும் ஊரிலும் கடன் வாங்கி அவன் தங்கையின் திருமணமும் ஜமாலின்
திருமணமும் ஒரே நாள் நடக்கிறது. விடுமுறை முடிந்து சவூதி திரும்புகிறான் ஜமால்.

திருமண கடன் எல்லாம் முடிகிறது இதற்கிடையில் ஜமாலுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இப்பொழுது ஊர் ஞாபகம் அவனை வாட்டுகிறது இப்பொழுதாவது ஊரில் செட்டில் ஆகவேண்டும் என தீர்மானிக்கிறான், இப்பொழுதும் ஒரு கடிதம் வருகிறது அனால் அக்கடிதம் அவன் பெற்றோரிடமிருந்தல்ல, அக்கடிதம் வந்தது அவன் மனைவியிடமிருந்து.

“அன்புள்ள கணவருக்கு..................... நீங்கள் ஊர் வரும் செய்தி அறிந்தேன் இத்தனை நாள் சம்பாதித்து உங்களுக்கென்று ஒன்றும் சேர்க்கவில்லை இப்பொழுது நமக்கு ஒரு குழந்தையும் ஆகிவிட்டது இப்பொழுது ஊர் வந்து நம் குடும்பத்திற்கு வழி என்ன இருக்கிறது நம் குழந்தையின் எதிர் காலத்தை மனதில் கொண்டு நீங்கள் அங்கேயே தொடர்வது நல்லது”.

ஜமாலின் சவூதி வாழ்க்கை மீண்டும் தொடர்கிறது இதற்கிடையில் ஒவ்வொரு முறையும், விடுமுறை நாட்கள் (vacation) குறைந்த நாட்களே அவன் வேலை செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அவன் வயதும் இளமையும் சவுதியிலேயே கழிகிறது.
ஜமாலின் மகனும் வளர்கிறான், வருடங்கள் கடந்து போகின்றன.
+2 முடித்து மேற்படிப்புக்கு தயாராகிறான் ஜமாலின் மகன்.

இப்பொழுது ஜமாலின் மகனிடமிருந்து ஒரு கடிதம், அதில் , “அன்புள்ள வாப்பாவுக்கு................... நான் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து இருக்கிறேன் எனவே எனக்கு என்ஜினியரிங் படிக்க விருப்பமாய் உள்ளது உங்கள் சம்மதத்தை எதிர்பார்கிறேன்”.

கடிதத்தை படித்த ஜமால் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற விழைகிறான்

உழைக்கிறான் தன் குடும்பத்திற்காக, மகனின் என்ஜினியரிங் படிப்பும் முடிகிறது ஜமாலின் மகனுக்கு இந்தியாவிலேயே வேலையும் கிடைக்கிறது.
இப்பொழுது தீர்மானமாய் முடிவெடுத்துவிட்டான் ஜமால் சவுதிக்கு விடை கொடுப்பது என்று.
தன் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் தன் நண்பர்களின் பிரிவுபச்சரத்தோடு விமானத்தில் ஜமால்.

ஒவ்வொரு முறை விடுமுறையில் ஊருக்கு செல்லும்போதும் அவன் பெட்டியில் வீட்டுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான் நிறைய சாமான்கள், அனால் இப்பொழுது அவன் பெட்டியில் நிறைய மருந்து மாத்திரைகள். ஆம், இத்தனை ஆண்டு வெளிநாட்டு வாழ்கையில் அவனுக்கென்று அவன் சம்பாதித்தது சர்க்கரை நோயும், இரத்தக்கொதிப்பு நோயும், கிட்னியில் கல்லும்தான் உடல் சோர்ந்து முடிகள் நரைத்து தாயகம் திரும்புகிறான் ஜமால்

இப்பொழுதும் அவன் சட்டைப்பையில் அவன் வீட்டிலிருந்து வந்த ஒரு கடிதம்.

ஆனால் அதை அவன் பிரித்து படிக்கவேயில்லை.
Continue Reading...

Sunday, July 18, 2010

பழுதான நிலையில் தொழும் பள்ளி



அதிரை ஆஸ்பத்திரிதெரு புதுப்பள்ளிவாசல் இடிக்கப்பட்டு புதிதாய் கட்டும் பனி, கடந்த ரமலான் முடிந்து துவங்கப்பட்டு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே, இப்பள்ளி கட்டி முடிக்கப்படும் வரையில் தொழ ஏதுவாக தனியாக கொட்டகை பள்ளி ஒன்று சிறிதாய் கட்டப்பட்டது அது இப்பொழுது பழுதடைந்த நிலையில் முழுதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது, ஏற்கனவே புதிய பள்ளி கட்டுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த இப்பள்ளிவாசல் நிர்வாகம் இப்பொழுது மற்றுமொரு பிரச்சனையை சந்தித்துள்ளது.
Continue Reading...

வகை வகையான இட்லி





Continue Reading...

Saturday, July 17, 2010

உங்கள் உடல் எடை சரியாக இருகிறதா...?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்

உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3

இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் இலகுவானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm
Continue Reading...

Wednesday, July 14, 2010

சளி பிடிக்காமல் இருக்க


சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது.
அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல்
தடுக்க உதவியாய் இருக்கிறது.

நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்
மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று
முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்
Continue Reading...
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template